புதன், 1 ஆகஸ்ட், 2012

நம்பிக்கை தரும் தமிழ்சினிமா







உலக சினிமாக்கள் மனித இயல் கூறுகளை கேமராவின் கோணங்களுக் குள் சிறைப்படுத்தி விடுவதால் பார் வையாளனின் அக உணர்வுகளோடு பேசும் தன்மை கொண்டு விளங்கு கின்றன. இத்தகைய சினிமாக்கள் எதிர் விமர்சனங்களை விட்டும் வெகு தூரத் திலும், விருதுகளுக்கு சமீபமாக வும் இருப்பதென்பது அதிகதிகமான பார்வை யாளன் மனதில் சினிமா மீதான புரி தலையும், நம்பிக்கையையும் வி தைக் க வழிவகை செய்கின்றன. இவ் வு லக சினிமாக்கள் மனித வாழ்வு, கலாசாரம், பண்பாடு போன்றனவற்றை அடையா ளப்படுத்துவதோடு மாத்திரமின்றி நல்ல பல விடயங்களைப்பற்றி கற்பித்துக் கொடுக்கவும், விழிப்புணர்வை உண்டாக்கவும் தவறுவதில்லை. கொரியா சினிமாக்களில் பௌத்த சூத்திரங்களை ஆராய்கிறார்கள். சீன சினிமாக்களில் கன்பூசியஸ் தியரி சொல்லப்படுகிறது. ஈரானின் சினிமாக்கள் உலக அரங்கில் முன்னனியில் நிற்கின்றன. இதில் குர்ஆன் கூறுகின்ற உலக தர்மங்கள் பேசப்படுகின்றன. இவ்வாறாக சினிமாக்கள் அமைகின்றபோது இவ்வகைச் சினிமாக்கள் காலத்தின் தேவையாகவும், சமூகத்தின் அங்க மாகவும் முன்னிருத்தப்படுகின்றன.