‘யாத்ரா'
ஆசிரியர்:
கவிஞர். அஷ்ரப் சிஹாப்தீன்
தொடர்பு :
‘யாத்ரா’ 37, தன்கனந்த வீதி, மாபோலை, வத்தளை.
ஈழத்து இலக்கியத்தில் கவிதைகள் தனியிடம் பிடிக்கின்றன. 1970களின் முன்னர் அதிகளவில் மரபுக் கவிதைகளையே ஈழத்துக் கவிஞர்கள் எழுதிவந்தனர். பத்திரிகைகளும் மரபுக் கவிதைகளுக்கே முன்னுரிமை கொடுத்து அவற்றைப் பிரசுரித்து வந்தன. அக்கால கட்டத்தின் பின்னர் புதுக்கவிதைத் தாக்கம் மிகுதியாகவும் இலக்கியத்தினுள் புகுந்துகொண்டது. எண்பதுகளின் பிற்பகுதியில் புதுக்கவிதை எழுதுபவர்கள் அதிகரித்தனர்.