It

சனி, 20 ஆகஸ்ட், 2011

நீங்கள் நலமாக…


‘ஓடி விளையாடு பாப்பா…’ இப்படிச் சொன்னான் பாரதி. இந்தக் கவிவரிகள் சொல்வதென்ன? ஒருவன் எத்தகைய செல்வங்களைப் பெற்றிடினும் தேகா ரோக்கியம் இல்லையேல் அவன் முதுகுடைந்தவனாகவே கணிக்கப் படுகின்றான். அது ஒருபுறமிருக்க மனித வளர்ச்சிப்படியின் ஆரம்ப நோக்க மே நலம்தான்.

புதன், 3 ஆகஸ்ட், 2011

யாத்ரா


யாத்ரா'
ஆசிரியர்:
கவிஞர். அஷ்ரப் சிஹாப்தீன்
தொடர்பு :
‘யாத்ரா 37, தன்கனந்த வீதி, மாபோலை, வத்தளை.

ஈழத்து இலக்கியத்தில் கவிதைகள் தனியிடம் பிடிக்கின்றன. 1970களின் முன்னர் அதிகளவில் மரபுக் கவிதைகளையே ஈழத்துக் கவிஞர்கள் எழுதிவந்தனர். பத்திரிகைகளும் மரபுக் கவிதைகளுக்கே முன்னுரிமை கொடுத்து அவற்றைப் பிரசுரித்து வந்தன. அக்கால கட்டத்தின் பின்னர் புதுக்கவிதைத் தாக்கம் மிகுதியாகவும் இலக்கியத்தினுள் புகுந்துகொண்டது. எண்பதுகளின் பிற்பகுதியில் புதுக்கவிதை எழுதுபவர்கள் அதிகரித்தனர்.

புதன், 1 டிசம்பர், 2010

‘மேற்கு மனிதன்’ கவிதை நூல் ஒரு நோக்கு


மேற்கு மனிதன் கவிதை நூல்
ஆக்கியோன்:
எஸ். ஹுஸைன் மௌலானா
பதிப்பகம் :
மிலேனியம் கல்வி ஸ்தாபனம், கொழும்பு
தொடர்பு :
20/5 பி, 10ஆவது ஒழுங்கை, கொழும்பு 03

ரைநடையில் எந்தவொரு கருத்தினையும் மிக இலகுவில் வெளிக்கொணரலாம். ஆனால் கவிதையில் ஆழமான, தத்துவார்த்தமான கருத்துக்களை வெளியிடுவதென்பது மிகக் கடினமான காரியம். நூலாசிரியர் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள தமது ஆழ்ந்த பற்றினை வாசிப்பின் தேடல் மூலம் உள்வாங்கி கவிதையாய் வெளிக்கொணர்ந்துள்ளார். என்கிறார் பதிப்பாசிரியர் திக்குவல்லை ஸப்வான்.
கொழும்பு மிலேனியம் கல்வி ஸ்தாபனத்தின் 07 ஆவது வெளியீடாக வெளிவந்துள்ளது. மேற்கு மனிதன் எனும் கவிதை நூல்.           மிலேனியம் கல்வி ஸ்தாபனத்தின் தலைவராகவிருந்து அதனை வழிநடத்திச் செல்லும் சிந்தனாவாதி எஸ். ஹுஸைன் மௌலானாவே இந்நூலின் சிற்பி. ஏற்கனவே பல உரைநடை நூல்களைத் தந்த அவரின் முதல் கவிதா முயற்சி மேற்கு மனிதன் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 13 செப்டம்பர், 2010

ஒரே இரத்தம்

திக்குவல்லை ஸப்வானின் ஒரே இரத்தம் - நூல் விமர்சனம்

கொழும்பு 6 மீரா பதிப்பகத்தாரின் 73 ஆவது வெளியீடாக வெளிவந்துள்ளது. "ஒரே இரத்தம்' மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு. ஏலவே தனக்கே உரித்தான பாணியில், தென்பகுதி மண் வாசனை கமழ, நல்ல தமிழில் "உம்மாவுக்கொரு சேலை' யைத் தந்த பிரபல சிறுகதையாசிரியர் திக்குவல்லை ஸப்வான்தான் இந்த மொழிபெயர்ப்புப் பணியைச் செய்தவர். இது மொழிபெயர்ப்பாசிரியரின் முதல் மொழிபெயர்ப்பு நூல், அவரால் தினகரன் வாரமஞ்சரி, மல்லிகை இதழ்களில் எழுதப்பட்ட சிறுகதைகளில் இருபது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் "ஒரே இரத்தம்' என்ற மகுடந்தாங்கி வெளிவந்துள்ளது.